Posts

சிட்டுக் குருவிக்கு நேர்ந்த கதி ?

Image
இணையத்தில் படித்த கதை ..... google image ஒரு பெரிய மரம். சிட்டுக் குருவிகள் கும்மாளம்  அடித்துக் கொண்டிருந்தது. அருமையான வசந்த காலம் அது..  கும்மாளத்திற்கு சொல்ல  வேண்டுமா ? சுகமான காலை  நேர வெயிலில் , உயரத்தில் கருடன்  ஒன்று பறந்துக் கொண்டிருந்தது.  அதன் கண்களிலும்  சிட்டுக் குருவிகளின் கும்மாளம் கண்ணில் பட்டது. சட்டென்று, கருடன் கண்ணில்  அவரும்  பட்டார். இது அவராயிருக்குமோ...?  என்கிற சந்தேகத்துடன்  உற்றுப்  பார்த்தது. அவர் வாகனத்தைப்  பார்த்ததும் சந்தேகம்  தெளிவுற்றது கருடனுக்கு. ஆமாம்......அவரேதான்.....எமதர்ம ராஜா . எருமை மேல் உல்லாசமாய் சவாரி செய்து யார் உயிரை வாங்கப் போகிறாரோ   என்று நினைத்துக் கொண்டே கருடன் பறந்தது. அவர் கண்ணில் நாம் படாமலிருந்தால் போதும்  என்று நகரப் போனது.  ஆனால் ஆர்வம் விட்டால் தானே ! யாருக்காக இப்படி  செல்கிறார் என்று பார்க்க ஆரம்பித்தது கருடன். சிட்டுக் குருவிகள் கும்மாளம் செய்து கொண்டிருந்த மரத்தின் அருகில்  வந்ததும்  எமன்  எருமையின்  லகானை  இழுத்து நிறுத்தி விட்டார். நிறுத்தி விட்டு வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார

யுத்தம் நடந்ததா? இல்லையா?

Image
google image  குருக்ஷேத்ரத்தில் யுத்தம் நடந்ததா இல்லையா? பலர் கேட்கும் மிகப் பெரியக் கேள்வி. ஆத்திகர்களும் நாத்திகர்களும்  யுத்தம் பற்றியக் கருத்தில் நிறையவே வேறுபடுவார்கள். நான் அந்த சர்ச்சைக்குள் போகவில்லை. ஆனால்  மகாபாரத யுத்தம் பற்றிய தத்துவ விளக்கம் ஒன்று 'வாட்ஸ் அப் ' இல்  சுற்றி வருகிறது. எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே கணக்குத் தெரியாது. என் மனதைத் தொட்ட விளக்கம் அது. நான் படித்தது ஆங்கிலத்தில். அதைத் தமிழில் படித்தால் மனதிற்கு இன்னும் நெருக்கமாக இருக்குமே என்கிற ஆசைதான்  இப்பதிவு எழுதத் தூண்டியது.  ஆங்கிலத்தில் எழுதியது யார் என்று தெரியவில்லை. அந்த முகம் தெரியாத நண்பருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள் பல. பதிவிற்குள் நுழைகிறேன். குருக்ஷேத்திர யுத்தத்தில் போரிட்ட வீரர்களுள்  பெரும்பாலானவர்கள் வீர மரணம் எய்தினார்கள் என்பது மகாபாரத இதிகாசம் சொல்லும் செய்தி. சஞ்சயன்  போர் முடிந்த பின், குருக்ஷேத்திர  யுத்தம் நடந்த இடத்திற்கு ,.  செல்கிறார். அங்கு பேரமைதி  நிலவுகிறது. " இங்கு தானா யுத்தம் நடந்தது? இங்கு தான் அர்ஜுனரும் கிருஷ்ணரும்